1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தனிப்பட்ட தகராறு காரணமாக

கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளார்.

நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துப்பிட்டிய பிரதேசத்தில் கொரககஹவத்த, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்த பெண் கொரககஹவத்த, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஆவார்.
 
வீட்டில் இருந்த ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாதுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
 
 கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த  பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
கொலையை செய்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி