1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள்

நிறைவடைந்த பின்னர் சமூக வலைதளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களைத் தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்  தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைதியான காலத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்பதனக சட்டம் உறுதி செய்கிறது என்று அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
 
ஆனால் சிலர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
 
அமைதியான காலப் பகுதியில் சமூக ஊடக  பிரசாரங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட சர்வதேச நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாக தலைவர் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி