ஜனாதிபதி வேட்பாளரை
ஊக்குவிப்பதற்காக வாக்காளர் ஒருவருக்கு தலா 5,000 ரூபாவை விநியோகித்ததாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பெரியமுல்லை பாலத்துக்கு அருகில் உள்ள நபரொருவரின் வீட்டில் சந்தே கநபர் பணம் விநியோகித்ததாக மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது.