தான் ஆட்சியில் நீடிக்காத வரை
எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கூற்றுக்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
கூட்டமொன்றில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க, “ரணில் விக்கிரமசிங்க ஓர் அரேபிய சுல்தானா?” என்று வினவினார். விக்கிரமசிங்கவின் தலைமையால் மட்டுமே எரிபொருள் நெருக்கடியைத் தடுக்க முடியும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார், அத்தகைய கூற்றுக்கள் அரசியல் கட்டுப்பாட்டை தக்கவைக்க பொதுமக்களின் அச்சத்தை கையாளும் முயற்சிகள் என்று கூறினார்.
டொலர் வீதம் அநுரகுமார தெரிவிக்கையில், அதிகாரத்தைப் பெற்றால் அது உயரும் என்று விக்கிரமசிங்க கூறுவதனை நிராகரிக்கிறேன். எமது ஆட்சியில் ரூபாவின் பெறுமதி உறுதிப்படுத்தப்படும் என்று கூறினார் .