அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்பை கொல்லும் சமீபத்திய முயற்சியை உளவுத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
புளோரிடாவின் வெஸ்ட் பாம்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் துப்பாக்கி சுடும் வீரரால் தாக்கப்பட்டார்.
டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 365 முதல் 400 மீட்டர் தொலைவில், கோல்ஃப் மைதானத்தின் கட்டுமானப் பாதையில் உள்ள புதர்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய நபர் குறிவைப்பதைக் கண்ட பாதுகாப்புப் படையினர், உடனடியாக அவரைச் சுட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் சில கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வேனில் தப்பிச் சென்ற சந்தேக நபர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதற்கு முன்னரும் பென்சில்வேனியாவில் நடந்த பேரணியிலும் இதே முறையில் அவர் குறிவைக்கப்பட்டு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.