ரணில் விக்ரமசிங்கவுக்கு
ஆதரவளிக்குமாறு கோட்டாபய ராஜபக்க்ஷவே தன்னிடம் கூறியதாக முன்னாள் மகாவலி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கட் நிறுவனத்தில் ஊழலுக்கு எதிராக தாம் போராடியபோது ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க ஊழல்வாதிகளை பாதுகாத்து அவர்களுடன் இணைந்து தமக்கு எதிராக செயற்பட்டதாக யூடியூப் உரையாடலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மகாவலி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு பகுதியை தனது நண்பர் ஒருவருக்கு வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்க ஒருமுறை தன்னிடம் செல்வாக்கு செலுத்தியதாக அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஊழல்வாதிகளை வைத்து அரசியல் செய்ய தாம் தயாரில்லை எனவும், அதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.