(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது.
இது தொடர்பாக இன்று (16) மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடும் வெயிலில் கிடக்கும் யானையை பாதுகாக்கும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபையினால் தண்ணீர் வழங்கும் செயற்படுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.