1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வாக்களிப்பு நிலையங்களில்

இடையூறு ஏற்படுத்தினால் சுடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
வாக்குப்பதிவு தினத்தன்று நாட்டின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப படைக்கு மேலதிகமாக முப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலின் விசேட கடமைகள் மற்றும் பாதுகாப்புக்காக 60,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிப்பாய்கள் குழுவொன்றும் ஈடுபடுத்தப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி