கொஹுவல பொலிஸ் பிரிவுக்கு
உட்பட்ட சாரங்கரா வீதியிலுள்ள கடை ஒன்றுக்குள் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொஹுவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெஹிவளை, நெதிமாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபராவார்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் கடையின் உரிமையாளராவார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கொலைக்கான காரணமோ, சந்தேக நபர்கள் தொடர்பிலோ இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.
கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.