1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி தேர்தல் காரணமாக

நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை இன்று (19) பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்குத் தேவைக்கேற்ப வழங்குமாறும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில பிரதேசங்களில் வாக்கு எண்ணும் நிலையங்கள் நடத்தப்பட்டுள்ள பாடசாலைகள் இம்மாதம் 24ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி