தேசபந்து தென்னகோன்
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரிய இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.
பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோரால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி கோடகொட, கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முதன்மையான ஆதாரங்கள் இல்லாததால் மனு நிராகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.