இந்த ஆண்டு ஜனாதிபதித்
தேர்தல் தொடர்பான வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவொரு நபரும் கையடக்க தொலைபேசிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் கொண்டு செல்ல முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இவ்வருட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த தகவல்கள் பல்வேறு வழிகளில் பரப்பப்பட்டு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், இம்முறை வாக்கு எண்ணும் அலுவலர்கள் மையங்களுக்குள் கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.