பொலன்னறுவை, பக்கமூன
பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று (19) காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக சுகவீனமடைந்து நிலையில் பக்கமூன, அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, பக்கமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிக எண்ணிக்கையானோர் பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.