தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இது தொடர்பில் உடனடியாக முடிவெடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.