மனைவியின் கையை வெட்டிய
கணவன் குறித்த செய்தி யாழில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெலிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவி வேறொருவருடன் நெருங்கிய உறவில் ஈடுபட்டதை பொறுக்க முடியாமல் மனைவியின் கையை வெட்டியதாக சந்தேக நபர் வாக்குமூலமளித்துள்ளார்.
மூடிய அறைக் கதவுக்கு பின்னால் இருவரும் தொடர்ந்து இரகசியமாக பேசிக் கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் மனைவியின் கையை துண்டித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் தெலிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.