அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அழுத்தம் காரணமாக குருநாகல் பொது மருத்துவமனையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர் சரத் வீர பண்டார உடனடியாக சுகாதார அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ் இந்த இடமாற்றம் இடம் பெற்றுள்ளதாக, மருத்துவமனையின் துணை பணிப்பாளர் சந்தன குதக்கமுவ தெரிவித்துள்ளார்.
கொரோனவை கட்டுப்படுத்துவதற்கு குருநாகல் மருத்துவமனையை முறையாக நிர்வகிக்கவில்லை என்று குற்றம் சாட்டியே தேசிய சுதந்திர முன்னணியின் ஆர்வலர் சரத் வீர பண்டார பதவி இடமாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவமனையின் முழு ஊழியர்களும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர், குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை முடியும் வரை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் பொது மருத்துவமனையின் பணிப்பாளராக பணியாற்றிய வைத்தியர் சரத் வீர பண்டார, முன்பு மருத்துவமனையில் பணிபுரிந்த வைத்தியர் சேகு ஷிகாப்தீன் முகமது சாபிக்கு எதிரான இழிவான நடவடிக்கையின் காரணமாக சர்ச்சைக்குரிய நபராக இருந்தார்.
நளிணின் வீட்டை கையளிக்கும்போது ஜோனுக்குக்கு கோபம் வந்ததா?
இது தொடர்பான விசாரணையில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் நலின் பண்டார, நோயாளிகளின் தொகை அதிகரித்தபோது, ஏப்ரல் 27 அன்று, குருநாகல் மருத்துவமனையில் மருத்துவர்களின் இல்லத்தை வழங்க முன்வந்தார்கள். அதன் போது வைத்தியர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் தேவைப்பட்டன.
இச் சந்தர்ப்பத்தில் இப்பகுதியி ல் உள்ள அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களளிடம் கலந்தாலோசிக்காமல் இந்த வீட்டை பெற்றுக் கொண்டதுதான்.
வைத்தியர் சரத் வீர பண்டாரவை குருநாகல் பொது மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்க வழிவகுத்த ஆரம்ப சம்பவம் இது எனலாம்
அடுத்த நாள், ஏப்ரல் 28 ஆம் தேதி, குருநாகளில் உள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நெருங்கிய கூட்டாளியான துஷார சஞ்சீவ இந்த வீட்டை கொடுத்தற்காக சண்டையிட்டார்.