தெஹிவளை பகுதியில் இன்று
(20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடவத்தை வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கிடையிலான போட்டியின் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது.