ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இன்று (20) காலை துபாய் சென்றுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பசில் ராஜபக்க்ஷ இன்று காலை எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்றுள்ளார்.
அவர் அமெரிக்க டாலர் 206 செலுத்தி "கோல்ட் ரூட்" முனையத்தில் வசதியைப் பெற்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பசில் ராஜபக்ஷ துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அவர் அமெரிக்கா செல்வதற்கு எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.