தேர்தல் பணிகளிலிருந்து 9 அரச
அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 9 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சுமணசேகர தெரிவித்துள்ளார்.
ஒன்பது அதிபர்கள், ஒரு பிரதி அதிபர், நான்கு ஆசிரியர்கள், ஒரு பொது சுகாதார பரிசோதகர், சமுர்த்தி முகாமையாளர் மற்றும் மூன்று வைத்தியர்கள் உட்பட 19 அரச உத்தியோகத்தர்கள் வேட்பாளர்களை ஊக்குவிப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு மையத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்படி,விரிவான விசாரணைகளின் பின்னர் 19 அதிகாரிகளில் 9 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என
ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரி எம். பி. சுமனசேகர தெரிவித்தார்.