அரசு மருத்துவமனைகளில் கடுமையான மருந்து பற்றாக்குறை இருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன கூறுகிறார்.
அதன்படி, 418 மருந்துகள் டெண்டர் அழைப்பு விடுக்காமல் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.நல்லாட்சிக் காலத்தில், 10-15 மருந்துகள் மட்டுமே தேவை கருதி வெளியில் இருந்து வாங்கப்பட்டன.
மருந்துகள் வழங்கும் ஒப்பந்தங்களை எடுப்பதற்காக இந்த நாட்களில் சில மருந்து மாஃபியாக்கள் அரசாங்கத்தின் உயரதிகாரிகளை பின் தொடர்ந்து செல்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவின் போது மருந்து நிறுவனங்கள்
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு மூடப்பட்டதை சாதகமாக பயன்படுத்தி மருந்து நிறுவனங்கள் ஏராளமான மருந்து பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக அரசாங்க சார்பு lankaleadnews.com தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, சில மருந்துகளின் விலைகள் மக்களால் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலிருந்து மேலும் தெரியவருவதாவது...
இதற்கிடையில், சில மருந்து நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.
மருந்து நிறுவனங்கள் விலைகளை அதிகரிக்க முயற்சி செய்கின்றன, விலைகளை அதிகரிக்க அனுமதிக்காவிட்டால் மருந்துகளின் பற்றாக்குறை இருக்கும் என்று சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது, இலங்கையில் 74 மருந்தகங்கள் விலைக் கட்டுப்பாட்டுக்கு ட்பட்டவை.
ஏற்கனவே, மருந்து நிறுவனங்கள் ஐம்பது சதவீதம் முதல் இருநூறு சதவீதம் வரை லாபத்துடன் மருந்து இறக்குமதி செய்கின்றன என்று தெரிவித்துள்ளார்.