கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகேவையும்
அவரது குடும்பத்தாரையும் கொல்வோம் என முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹொக்கி கட்டா மற்றும் குடு சலிது ஆகிய இரு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை விமர்சித்து நீதிவான் திலின கமகேவை இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் கொல்வோம் என மிரட்டல் கடிதங்களை அனுப்பியமை தொடர்பான விசாரணைகளின் பின்னர் நீதிவானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.