பெண் ஒருவரின் கொலை
தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான யுவதி ஒருவரை கைது செய் துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் வெலிவேரிய, அம்பரலுவ பகுதியில் 58 வயதுடைய பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற இரண்டாவது சந்தேகநபரான மாயா என்பவர் பாலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது, 05 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 22 வயதுடையவர் என வெலிவேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.