கடந்த நிர்வாகத்தின்போது மதுபான
அனுமதிப்பத்திரங்களை பெற்று விநியோகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பெயர்களை உடனடியாக வெளியிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக நாடு முழுவதும் மதுபானசாலைகள் பரவி வருகின்றமை தொடர்பில் சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்திற்கொண்டே கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதன் வெளிப்படைத்தன்மையின்அவசியத்தை சுமந்திரன் வலியுறுத்தினார் .
இந்த மதுபான சாலைகளை திறக்க பரிந்துரை செய்த பொறுப்பான நபர்களின் பட்டியலையும் அரசு வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் .