ஹனீப் யூசுப்பை மேல்மாகாண
ஆளுநராக்க அவருக்கு அரச நிர்வாகத்தில் என்ன தகுதி இருக்கிறது என்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நிசாம் காரியப்பரின் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்திருப்பதாவது,
அண்மையில் ஊடகத்தில் நிசாம் காரியப்பர் கருத்து தெரிவிக்கும் போது
ஹனீப் யூசுப் ஒரு சிறந்த வர்த்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் ஏற்றுமதி துறையில் மில்லியன் கணக்கான பணத்தை நாட்டிற்கு ஈட்டித்தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் அனுரவின் வெற்றிக்காக நிதி வழங்கியிருக்கலாம். அதனால் அவருக்கு கைமாறாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதா? என்று நிஸாம் காரியப்பர் சொல்லியுள்ளமை சிறுபிள்ளைத்தனமான கருத்தாகும்.
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கிளைகளைக்கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தை சிறப்பாக நிர்வகிக்கும் ஒருவருக்கு ஆளுனர் பதவியில் இருப்பது பெரிய விசயமல்ல.
அரசியல் பின்னணியை மட்டும் கொண்ட அலவி மௌலானா மேல் மாகாண ஆளுனராக மிக சிறப்பாக கடமையாற்றினார். நிசாம் காரியப்பரின் தலைவர் அஷ்ரப் அவர்கள் அலவி மௌலானாவுடன் நெருங்கி செயற்பட்டதுடன் அவர் செயற்பாடு பற்றி வியந்து பேசுவார்.
அவரைப்போன்று கர்வமற்ற, சகலருடன் அன்பாக பேசும் ஒருவராக மேல் மாகாண ஆளுனரை நாம் காண்கிறோம்.
ஒரு வியாபார நிறுவனத்தின் உரிமையாளரான, அரசியல் என்றே என்னவென்றும் தெரியாத புஹார்தீன் ஹாஜியை அவர் கட்சிக்கு காசு கொடுத்ததற்காக அஷ்ரப் எம்பியாக நியமித்தது நிசாம் காரியப்பருக்கு மறந்து விட்டதா? எம்பியாக இருக்கும் எந்த தகுதியும் இல்லாத ஒருவரை காசுக்காக நியமிப்பது சரியா என அஷ்ரபிடம் அன்று நிசாம் காரியப்பர் பகிரங்கமாக கேட்டாரா?
மேல் மாகணத்துக்கான ஆளுனராக தகுதிவாய்ந்த ஒருவரையே கௌரவ ஜனாதிபதிஅநுர குமார நியமித்துள்ளார் என்று உலமா கட்சி உறுதியாக நம்புகிறது.