உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பான விசாரணைகளை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் வெளியான செய்திகள் குறித்து கவலையடைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை இட்டு நாமல் ராஜபக்க்ஷ இதனைக் தெரிவித்துள்ளார்.
உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளதாக வெளியான செய்திகள் உண்மையென்றால் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அதனைக் கண்டறிந்து பொது மக்களுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் அந்தக் குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்.