முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு செல்லும் வீதியான மிரிஹான பங்கிரி வட்ட வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை தாக்குவதற்கு சிவில் உடை அணிந்தவர்கள் சிலரை தாக்குவதற்கு தூண்டிவிட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 9.00 மணிக்கு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான 12 பேர் தங்களின் மனித உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.