அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேச
வீடொன்றில் தம்பதியர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அல்கேவத்தையைச் சேர்ந்த கமனி வீரதுங்க (63), பி.ஜயசிங்க (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த தம்பதியின் மகள் சிகிச்சைக்காக கொழும்பு சென்றுள்ள நிலையில் இன்று (04) காலை வீட்டிலிருந்த தந்தையின் தொலைபேசிக்கு மகள் அழைப்பு விடுத்தபோதும் தந்தை பதிலளிக்காமையினால் உறவினர்களிடம் தந்தையை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டில் இரத்தக்கறை இருந்ததை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் அங்கு சென்று சோதனைசெய்தபோது, வீட்டுக்குள் கணவனும் மனைவியும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.