எதிர்வரும் பாராளுமன்ற
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) அறிவித்துள்ளார்.
இருபது வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாக அவர் தெரிவித்தார்.
பல வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்கு இந்த நகரை அறிவு மையமாக அல்லது பிரக்ஞை மிக்க நகரமாக மாற்றுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வருடங்களில் மீண்டும் பிஎச்.டி படிக்க உள்ளதாகவும், மேலும் படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.