1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய தேசியக் கட்சியின்

பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பில் பல தடவைகள் நீண்ட நேரம் கலந்துரையாடிய தலைவரான ருவான் விஜயவர்தன, இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளார்

இதேவேளை, உரிய தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் தனிக்கட்சியாக சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவது எதிரணியின் பிளவைக் காட்டுவதால் மக்கள் வாக்களிப்பதைத் தவிர்ப்பார்கள் என்றும் அதனால் அக்கட்சி சோர்வடையலாம் என்றும் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்

இந்நிலையில், இறுதியில் உரிய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்காக தீவிரமாக பங்கேற்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி