1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு -12 கெசல்வத்தை

பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீர்சாஹிப் வீதி பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தகராறு காரணமாக இந்த நபர் ஒரு குழுவினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெசல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி