1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்றத் தேர்தலில்

ஐந்து கட்சிகள் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அந்தக் கட்சிகளின் செயலாளர்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் சார்ந்த கட்சிகளை தேர்தலில் போட்டியிட  அனுமதிப்பதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அக்கட்சிகளுக்கு பல செயலாளர்கள் உள்ளதாகத் தகவல் வெளியானதையடுத்து  அது தொடர்பில் அண்மையில் உரிய பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடிய போதிலும், அது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் எட்டப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
அத்துடன், நீதிமன்றத்தின் ஊடாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி