நாடாளுமன்றத் தேர்தலில்
மூவருக்கு வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!
இந்த வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சிக்கு எதிராக செயற்பட்டமை காரணமாகவே இந்த நியமனங்களை வழங்குவதில்லை என தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கட்சியின் உயர் மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.