அரச புலனாய்வுப் பணிப்பாளராக
கடமையாற்றிய இலங்கை இராணுவ பிரிகேடியர் சுரேஷ் சலே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் நேற்று (04) முதல் ஓய்வு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை நிரந்தரமாக்க பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.