ஐக்கிய தேசியக் கட்சி
தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்கவே தலைமை தாங்குவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் பல்வேறு விவாதங்களை நடத்தி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகள் காரணமாக பேச்சுவார்த்தை முறிவடைந்தது