முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போதும் கூட முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக 50 விசேட அதிரடிப்படையினர்,6 உயரடுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 163 பேர் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ரஜித் கீர்த்தி தென்னகோன் உட்பட பலர் இந்த பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.