1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே இவ்வாறானதொரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கூறுகையில், மஹிந்த ராஜபக்க்ஷவின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்திய சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளது .

இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்கொள்ளக் கூடியதான அச்சுறுத்தல்களை மதிப்பிடாமல் இவ்வாறு செயற்படுவது தவறு என்றும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி