1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு, கெசல்வத்தை பொலிஸ்

பிரிவுக்கு உட்பட்ட டெக்னிக்கல் சந்தி (தொழில்நுட்பக் கல்லூரி சந்தி) பகுதியில் இன்று (07) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான அவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண்.

இவரது நிரந்தர வதிவிட முகவரி இதுவரை வெளியாகாத நிலையில், வேறு ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கெசல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி