புலனாய்வுத் தகவல் கிடைத்தும்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன இன்று (07) உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை அவர் மீறியுள்ளார் என தெரிவித்த உயர் நீதிமன்றம், 75 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறும் முன்னர் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அவர் நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.