இலங்கை தேசிய அணியின்
தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெற் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இவர் ஒக்டோபர் 2024 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 31 மார்ச் 2026 வரையிலான காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் இலங்கை அணியின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இலங்கை கிரிக்கட் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக காணப்படுகின்றது.
அந்த போட்டிகளுக்கு சனத் ஜெயசூர்ய பயிற்சியாளராக செயற்பட்டார்