இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்
பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம் அவரது நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டமையே என்று கூறப்படுகிறது.
கனிஷ்க விஜேரத்ன தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்ன 2020 ஜனவரி 21 முதல் அமுலுக்குவரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.