1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு

உட்பட்ட வல்பலகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு தொடர்பில் 119 நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (07) இரவு குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த. வீட்டில் இருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து காணப்பட்டதனையடுத்து  அவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் குறித்த நபர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வல்பலகம - நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இவர் மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்யும் நபர் என்பதும், அக்கம் பக்கத்தினரை திட்டி பிரச்சினை செய்யும் நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இறந்தவர் கூக்குரலிடுவதனைத் தடுக்க அவரது வாயை மனைவி துணியால் பொத்தியபோது அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த 42 வயதுடையவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலி

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி