மதுவரி திணைக்களத்தின்
ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
குணசிறி ஒப்பந்த அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
பதில் மதுவரி ஆணையாளர் நாயகமாக யூ. டி.என் ஜயவீரவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.