இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு
தலைவர் உபுல் தரங்கவுக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆட்ட நிர்ணயம் தொடர்பான விவகாரத்தில் சாட்சியமளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததே இதற்குக் காரணம்.
'லெஜண்ட்ஸ் லீக்' போட்டியில் ஆட்ட நிர்ணயம் செல்வாக்கு செலுத்தியதாக உபுல் தரங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் வெளிநாட்டுக்கு பயணம் செய்ததற்காக அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.