சந்தேக நபர்களை சித்திரவதை
செய்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு ஊடக அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோத கைதுகள், தடுப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்புகள் பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை செயற்படுத்தப்படாமல் பொலிஸாரின் அடாவடித்தனம் தொடர்கிறது.
இவ்வாறு இளம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், மனித உரிமைகள் ஆணையம் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 51 தீர்ப்புகளையும், 14 வழக்குகளில் சந்தேக நபர்களை சித்திரவதை செய்ததாக 25க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.