முன்னாள் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மரண அச்சுறுத்தல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்லத் திட்டம் தீட்டப்பட்டதாகத் தேர்தல் காலத்தில் சில தகவல்கள் வெளிவந்தன. இது தொடர்பாக முறைப்பாடும் பெறப்பட்டது. இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அப்படியொரு கொலைத் திட்டம் எதுவும் வெளியாகவில்லை. தேர்தல் நேரத்தில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இப்போது அத்தகைய பாதுகாப்பு தேவையில்லை.
அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.