புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த களு துஷாரவிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புஸ்ஸா சிறைச்சாலை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலையின் டி பகுதியின் விசேட பிரிவின் 78ஆவது அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவை மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் சிம் அட்டை தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.