பொதுபல சேனா அமைப்பின்
பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேசிய படை அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம்களின் புனித அல் குர்ஆனை அவமதித்தமை தொடர்பான வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
விசாரணை அடுத்த வருடம் மார்ச் 5 க்கு ஒத்திவைக்கப்பட்டது.