முன்னாள் அமைச்சர்களுக்கு
வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகளே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் குறித்த குடியிருப்புகளை உடனடியாக அவர்களிடம் ஒப்படைக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.
தொடர்ந்தும் குடியிருப்புகளை ஒப்படைக்கத் தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி தெரிவித்திருந்தார்.