முன்னைய ஆட்சியினால்
ஸ்தாபிக்கப்பட்ட "தேசிய மக்கள் பேரவை"யை ஜனநாயகத்தில் பங்கேற்பதை வலுப்படுத்துவதற்காக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த மூன்று அரசாங்க திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஆலோசகர்களின் சேவையை நிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய நிர்வாகத்தின்படி, 30-09-2024 முதல் அமுலுக்குவரும் வகையில் மேற்படி அதிகாரிகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.