பொதுத் தேர்தலில் திகாமடுல்ல
மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் “மரச்” சின்னத்தில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ் லீடருக்கு தெரிவித்தார்.
ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இந்த இரு மாவட்டங்களிலும் போட்டியிடுவோர் தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.